Sunday, July 28, 2019

Google கூகிள் 21- வது வருட கொண்டாட்டம்

Google கூகிள் கொண்டாடும் 21-வது பிறந்தநாள் 

வரும் செப்டம்பர் 27 அன்று வருகிறது. இந்த கூகிள் - நமக்கெல்லாம் கிடைத்தது பற்றி நம்ம தெரிஞ்சிக்க வேண்டிய முக்கிய சில துளிகள்...

21st Year Google Birthday

   கூகிள் , கூகிள் என, மாணவர்கள் முதல் ஆசிரியர் பேராசிரியர் வரை, இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை, மங்கைகள் முதல் இல்லத்தரசிகள் வரை என அனைவரும் எந்த டவுட்களும் உடனே கணினியிலும்,  கைபேசியிலும் செல்லும் கூகிள் தேடல். 

  இதை லாரிபேஜ் மற்றும் அவருடைய நண்பர் சேர்ஜி பிரின் என்ற இரண்டு நபர்களும் 1996-ல் உருவாக்க பல கணினி மொழியில் கோடிங் செய்து ஒரு வழியாக சரியான தேடல்கள் எழுத்து பிழைகளை சரிசெய்து சரியாக தேடி கொண்டுவர வருவதற்கு கணித்த பிறகு (Googol.com) கூகோல்.கொம் என பெயர் வைக்கதான் நினைத்தனர். 

   ஆனால் அதை ஏற்கானவே வெறோருவர் பதிவு செய்து வைத்திருந்ததால். தற்செயலாக மாறி மாறி டொமைன் தேடலில் கூகிள்.கொம் (Google.com) என கிடைத்தது. இதையே தேர்வு செய்து பயன்படுத்த தொடங்கி வாடகை கட்டிடத்தில் இருந்த அந்த நிறுவனம். 2006-ல் அந்த கட்டிடத்தையே சொந்தமாக வாங்கியது. கூகிள் வாங்கும்போது அந்த கட்டிடத்தின் மதிப்பு $ 313 டாலர்.  கூகிள் இன்று எளிய முறையில் எந்த தேடல்களையும், இன்றைய சூழலுக்கு தகுந்தவாறு உதராணத்திற்கு கதை, கட்டுரை, இலக்கியம், வரலாறு, பாடல், சமையல், அழகு கலை, பொது அறிவு, புத்தகம், மருத்துவம், வேலை, சினிமா செய்திகள், உலக செய்திகள், கூகிள் இமெஜ் மற்றும் கூகிள் மேப் இது அனைத்து இடங்களில் அதிகமாக வழிதடங்கள் தெரிய நபர்கள் இதன் மூலம் புதிய இடங்களுக்கு விரைவாக வரைபட உதவி மூலம் செல்வார்கள். 

   இவ்வாறு கூகிள் நிறுவனம் இன்று 21-வது வருடம் கொண்டாட்டத்தை, உலகெங்கும் பல மில்லியன் மக்கள் இந்த கூகிள்.கொம் (Google.com)  இணையதளத்தை பயன்படுத்துவதோடு, இதன் வெவ்வேறு புதிய புராடக்டெக் ஆன பல மென்பொருள்கள் அமைப்பதிலும் நம்பர் 1 ஆக வந்துகொண்டு இருக்கிறது. அதற்கு மக்கள் உங்கள் ஆதரவை கொடுத்ததோடு வாழ்த்துக்கள் தெரிவிக்க கீழே உள்ள காமண்ட் மூலம் தெரிவிக்கவும். 

எனவே  நன்றியை 21 முறை கூகிள்  Google கூகிள் Google கூகிள்  Google கூகிள்  Google கூகிள்  Google  கூகிள் Google  கூகிள் Google கூகிள் Google கூகிள் Google  கூகிள் Google கூகிள்  Google கூகிள் Google கூகிள்  Google கூகிள் Google கூகிள்  Google கூகிள் Google கூகிள் Google கூகிள் Google கூகிள் Google கூகிள் Google   கூகிள் Google Thanks நன்றி என தெரிவிக்கிறோம்.

Tuesday, July 23, 2019

ஏழைகளின் நண்பன்

பெருந்தலைவர் காமராஜர்


முன்னுரை


     தென்னாட்டு காந்தி என்று அப்போடு மக்களால் அழைக்கப்படுபவர் கர்மவீரர் காமராஜர். தன்னலம் கருதாது பொதுநலம் கருதிய தலைவர்களுள் ஒருவர் இவர். ஏழைக் குடும்பத்தில் பிறந்து தன்னிகரில்லாத் தலைவராக உயர்ந்த உத்தமர்

பிறப்பு-இளமைப்பருவம்


     1903-ம் ஆண்டு தமிழகத்திலுள்ள விருநகரில் பிறந்தார். இவரது தந்தையார் குமாரசுவாமி தயார் சிவகாமி அம்மாள் ஆகும்.  இளம் வயதிலேயே தாய்நாட்டின் மீது பற்றுகொண்ட காரணத்தினால் இந்திய விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்டவர். ஆதனால் சிறைச்சாலைக்கும் சென்ற வீரர் இவர்.

     இந்திய நாட்டின் மீது அளவற்ற அன்பு கொண்டிருந்த காமராஜர் நாட்டு மக்களை வெகுவாக நேசித்தார். அவர் பள்ளிக்கூடம் சென்று படித்ததில்லை. இருப்பினும் தமிழகத்தில் ஏழைகள் உட்பட அனைவரும் கல்வி க்றவர்களாக இருக்க வேண்டும் என்று ஆசை கொண்டவர்.

தமிழக முதல்வரானார்


   மூதறிஞர் ராஜாஜி தமிழக முதல்வர் பதவியிலிருந்து விலகிய காரணத்தினால் 1954-ம் ஆண்டு காமராஜர் தமிழக முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தன் நாட்டு மக்களின் நலனுக்காக பாடுபட்ட இவர் தன் வாழ்நாளில் திருமணமே செய்து கொள்ளாமல் பிறர்க்கெனவே வாழ்ந்தார்.

     தான் முதல்வராய் பதவி வகித்த காலத்தில் ஓர் கிராமத்தில் ஏழைச் சிறுவன் மாடு மேய்த்துக் கொண்டிருப்பதைக் கண்டார். அச்சிறுவனிடம் பள்ளிகூடம் போய் படிக்காததன் காரணத்தைக் கேட்டார். அந்தச் சிறுவனோ, ‘பள்ளிக்கூடம் போனால் எனக்கு உணவு கிடைக்காது. மாடு மேய்த்தால்தான் எனக்கு உணவு கிடைக்கும்” என்று பதில் சொன்னான். அந்தப் பதில் காமராஜரின் உள்ளத்தைத் தைத்தது.

     பள்ளிக்கூடத்தில் உணவு கிடைத்தால் ஏழை மாணவர்களும் கல்விகற்க வருவார்கள் என்ற எண்ணம் பிறந்தது. உடனே தமிழகத்தின் அனைத்துப் பள்ளிக்கூடங்களிலும் மதிய உணவை இலவசமாக வழங்கும் திட்டத்தை வகுத்தார். இதுவே மதிய உணவுத் திட்டம் ஆகும்.

     தன்னலம் கருதாது, நாட்டு மக்களின் நலம் ஒன்றையே பெரிதும் நினைத்து பாடுபட்டார். அதனால்தான் காமராஜரை, ‘படிக்காத மேதை”, ‘கருமவீரர்”, ‘கருப்பு காந்தி”, ‘ஏழைகளின் நண்பன்” என்று மக்கள் சிறப்புப் பெயர்கள் கூறி அழைத்தனர்.

தமிழகத்தின் பொற்காலம்


    மக்களின் நலன் ஒன்றை மட்டுமே கருத்தில் கொண்டு ஆட்சி நடத்தினார் காமராஜர். அதனால் இவர் தமிழகத்தின் முதல்வராக பதவி வகித்த ஒன்பது ஆண்டுகளும் தமிழகத்தின் பொற்காலம் என்று பலர் கூறுவதுண்டு.

     ஒருநாட்டில் கிராமங்கள் வளர்ச்சி அடைந்தால்தான் அந்நாடு வளம்பெறும் என்ற காந்தியடிகளின் கூற்றை தானும் மேற்கொண்டவர் காமராஜர். கிராம மக்கள் அனைவரும் கல்விகற்க வேண்டும் என்ற உயரிய நோக்கில் கிராமங்கள் தோறும் பள்ளிகள் திறக்கச் செய்தார்.

    அதுபோல் ஏழை, செல்வந்தர் பாகுபாடு நீங்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் பள்ளிக்கூடங்களில் சீருடை திட்டத்தினையும் ஏற்படுத்தினார்.

அனைவரின் அன்பாளர்


     காமராஜர் காங்கிரஸ் கட்சியை தழுவியிருந்தாலும் முதல்வர் பதவியிருந்து விலகிய பின்பும் மற்ற எல்லா அரசியல் கட்சி தலைவர்களின் மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரியவராகவே திகழ்ந்தார். இதிலிருந்து கட்சி வேறுபாடு இன்றி எல்லோருடைய மனதிலும் இடம் பெற்வர் காமராஜர் என்பது உறுதியாகிறது.

     முதல்வர் பதவியிலிருந்தபோதும் காமராஜர் மிகவும் எளிமையான வாழ்க்கையே வாழ்ந்தவர் தனக்கென்று எந்த சொத்துக்களோ, பொருளோ சேர்த்து வைக்காமல் வாழ்ந்தார். அவருடைய இறுதிக் காலம்வரை வாடகை வீட்டில்தான் வசித்தார். அவர் விட்டுப்போன சொத்துக்கள் இரண்டு சட்டை, வேட்டிகள் மற்றும் சொற்ப பணமே.

முடிவுரை


     மக்களின் பெருமதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய பெருந்தலைவர் காமராஜர் 1975-ம் ஆண்டு இவ்வுலகை விட்டு மறைந்தார். காமராஜர் மறைந்த தினம், காந்தியடிகள் பிறந்த திமாக அக்டோபர் 2ம் நாளே ஆகும். அதனால் காந்தி பிறந்த தினம், காமராஜர் மறைந்த தினமாகவும் நினைவில் கொள்ளப்படுகிறது.

Monday, July 22, 2019

இந்திய பெண்கள் முன்னேற்றம்


பெண்கள் முன்னேற்றம்  


முன்னுரை


     மாதர் போற்றும் மாந்தர்க்கு மாலைகள் தரவேண்டும்  என்று பாடினர் கவிஞர் பெருமகள். மங்கையராய் பிறப்பதற்கு நல் மாதவம் செய்திடல் வேண்டும் என்றார் கவிமணி.  பெண்ணை தாயாகக் கருதிவந்த பாரத நாட்டில் பெண்கள் அடிமைப்பட்டும் கொடுமைப்படுத்தப்பட்டும் வருகிறார்கள் என்பது உண்மை பெண்களை பெண்களே அழிக்கவும் முற்படுகிறார்கள் என்பது வேதனை.

பெண்ணின் நிலைமை


     புராதனக் காலத்தில் பெண்ணிற்கென பெருமை இருந்தது அதனால்தான் தாய்நாட்டை. நுதிகளையெல்லாம் பெண்ணின் பெயர் கொண்டு அழைத்தார்கள். சங்ககாலத்தில் பலபெண்புலவர்கள் வாழ்ந்தனர் என்பதிலிருந்தும். ஜான்சிராணி, ராணி மங்கம்மாள் போன்ற மகளிரின் வீர வாழ்க்கையிலிருந்தும், பெண்கள் எல்லாத்துறையிலும் சிறந்து விளங்கினர் என்பதை நாம் அறிந்து கொள்ள முடியும்.

     ஆனால் காலப்போக்கில் இது மாறியது. பேண்களின் மீதான அடக்குமுறை வளரத்தொடங்கியது. அடுப்பூதும் பெண்ணிற்கு படிப்பெதற்கு என்ற கேள்வி வளர்ந்தது பெண்கள் அடிமைப் படுத்தப்படத் தொடங்கினார்கள்.

     கணவன் இறந்தால் அவன் மனைவியானவள் அவனோடு தீயில் குதித்து இறக்க வேண்டும் என்ற வழக்கம் சதி என்ற பெயரால் இருந்துவந்தது. ராஜாராம் மோகன்ராய் போன்ற சீர்திருத்தவாதிகள் அதை அருமபாடுபட்டு அகற்றினார்கள்.

     ஒரு குடும்பத்தில் ஆண் வகிக்கும் பொறுப்பை இன்று பெண்களும் வகிக்கிறார்கள். பல குடும்பங்கள் பெண்ணை நம்பியே நடக்கின்றன. ஆனால் இன்றளவும் வரதட்சணை என்ற பெயரால் பெண்ணையும் கொடுத்து பொன்னையும் கொடுக்கிறார்கள். அப்பெண்களில் பலர் புகுந்த வீட்டுப் பெண்களாலேயே கொடுமையும் படுத்தப்படுகிறார்கள் என்பது வேதனைக்குரியது.

     மனைவி இறந்தால் மணமகன் வேறு திருமணம் செய்து கொள்ளும் வேளையில் விதவைத் திருமணம் மறுக்கப்படுகிறது.

சமுதாயத்தில் பெண்மை


     இன்றளவும் சமுதாயத்தில் பெண்களுக்கு இரண்டாம் இடமே தரப்படுகிறது. நடு இரவில் ஒரு இளம்பெண் தனித்து வீதியில் நடந்தால் நாட்டில் அமைதி நிலவுகிறது என்று ஏற்றுக் கொள்வதாக காந்தியடிகள் கூறினார். ஆனால் பட்டப்பகலிலேயே பெண்களை சீரழிக்கும் ஆண்களைப் பற்றிய செய்திகள தினமும் செய்திதாள், இணையதம், ஊடகங்கள் வாயிலாக வந்த வண்ணNமு இருக்கிறது.

     பல குடும்பங்களில் இன்றளவும் பெண் சிசுக்கொலை நடந்தவண்ணம் உள்ளன. பேண்களுக்கு போதியகல்வியறிவையும் குடும்பத்தினர் தருவதில்லை. அதுபோல திரைப்படங்களிலும், விளம்பரங்களிலும் பெண்களை வெறும் போகப்பொருளாகவே சித்தரிப்பதுமு; வேதனைக்குரியதே.

     ஏத்துறையிலும் எங்களால் சாதிக்க முடியும் என்று பெண்கள் இன்று நிரூபித்தும் வருகிறார்கள். இருப்பினும் இன்றளவும் பெண்ணின் மீதான கொடுமைகள் நடந்தவண்ணவே உள்ளன. இதை யாரலும் மறுக்க முடியாது. ஆனால், பல மகளிர் அமைப்புகள் தோன்றி இக்கொடுமைகளைக் கேட்டும் அகற்றியும் வருகின்றன என்பதே ஆறுதலுக்குரிய செய்தி.

அரசு திட்டங்கள்


     அரசும் பல சட்ட திட்டங்களை கொண்டு வந்து மகளிர் முன்னேற்றத்தில் அக்கறைக் காட்டியுள்ளது வரவேற்கத் தக்கது. முhநில அரசும், மத்திய அரசும் வரதட்சணை எதிர்பபுச் சட்டம், மகப்பேறுகால உதவிச் சட்டம், தொழிற்சாலை விதிகள், சாரதா சட்டம், சம ஊதிய சட்டம் போன்ற சட்டங்களை உருவாக்கி மகளரி முன்னேற்றத்தினை ஊக்குவித்து வருகிறது. அரசுத் துறைகளிலும் பாராளுமன்றத்திலும் மகளிருகு;கான 33 சதவீத இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

     அரசோடு சேர்ந்து பொது மக்களும் பெண்களின் கல்வி, சமஉரிமை போன்றவற்றை அளித்து மகளிர் உரிமையைக் காப்பாற்ற வேண்டும். ஆணும் பெண்ணும் சமம் என்ற கருத்தைக் கொள்ள வேண்டும்.

முடிவுரை


     ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்தான், இவ்வையம் ஓங்கித் தழைக்கும். என்ற பாரதியின் கனவை நனவாக்குவோம். சமுதாயம் என்னும் வண்டியின் இருசக்கரங்கள் ஆணும் பெண்ணும் என்னும் உண்மையைப் புரிந்து, மகளிர் முன்னேற்றத்தில் யாவரும் பங்கு கொள்ள வேண்டும்.

Sunday, July 21, 2019

பொதிகை தென்றலும் குற்றால சாரலும்.

குற்றால மலைவளம்

முன்னுரை


   ‘பொதிகையும் தென்றலும் பிரிக்க வொண்ணாதது” என்பார்கள் கவிஞர் பெருமக்கள். பொதிகை மலை சார்ந்த இடமே குளிர்காற்று வீசும் குற்றாலம் ஆகும். சுற்றுலாத் தலமாகவும் கோடை காலத்திற்கு இதம் அளிக்கும் இடமாகவும் குற்றாலம் விளங்கிவருகின்றது.

அமைவிடம்


   தென் தமிழ்நாட்டிலுள்ள தென்காசி நகருக்கு அருகில் அமைந்துள்ளது தென்பொதிகை குற்றாலம். குறிஞ்சி நிலமான குற்றாலத்தைச் சூழ்ந்து மலைகளும், மரங்களும் காண்போர்க்கு வனப்பும், களிப்போருக்கு மகிழ்ச்சியும் தரவல்லது. எங்கு நோக்கினும் பச்சைப்பசேலென்ற செடி, கொடிகள் பலவும் சூழ்ந்த பொதிகை மலையில் ஓடும் நதியே ஆங்காங்கே பல அருவிகளாக விழுகின்றன.

அருவிகள்


   ‘விழுவதில் அழகு அருவி” என்று வர்ணிப்பார்கள் அழகின் ஆர்வலர்கள். அந்த வகையில் குற்றாலத்தில் எண்ணற்ற அருவிகள் உள்ளன. ஆனி, ஆடி மாதங்களில் பெய்யும் தென்மேற்குப் பருவமழையில் ஒவ்வொரு அருவியிலும் பன்னீராய் நீர் கொட்டுகிறது.

   பழைய குற்றாலம் எனப்படும் இடத்தில் பழை அருவி விழுகிறது. புதிய குற்றால அருகில் ஐந்தருவி விழுகின்றது. ஐந்து அருவிகள் ஒரு சேர விழுவதாலேயே இதற்கு ஐந்தருவி என்று பெயர். இது தவிர புலியருவி, தேனருவி, பழத்தோட்டஅருவி, செண்பகாதேவி, சிற்றருவி, பாலருவி என்றும் பல அருவிகள், சிங்கவாய் ஓடை என பன்னீரைப் பாய்ச்சுகின்றன.

புத்துணர்ச்சிக் குளியல்


  ஆண்டுதோறும் வெளி நாடுகளிலிருந்தும், இந்தியாவின் பல தேசங்களிலிருந்தும், சென்னை, மதுரை, திண்டுகள், திருச்சி, கரூர் போன்ற பெரிய நகரங்களில் உள்ள மக்கள் தென்பொதிகை குற்றாலத்திற்கு வந்து இங்குள்ள அருவிகளில் குளித்து இன்புறுகிறார்கள். இங்குள்ள அருவிகள் பொதிகை மலையில் வளர்ந்துள்ள பல மூலிகைச் செடிளின் வேரில் பாய்ந்து வருகின்றன. அதனால் இவ்வருவிகளில் குளிப்பவர்க்கு மருத்துவப் பயன்களும் கிடைக்கின்றன என்று நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும் அருவியில் உடல் சூடு குறைவதேடு தேகம் குளிர நீராடுவதே உடலுக்கு மனதிற்கும் புத்துணர்ச்சி அளிக்கவல்லது என்று உடலியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

    சித்தம் கலைந்த, புத்தி சுவாதீனமற்ற நோயாளிகளை அழைத்து வந்து அவர்கள் தலையில் எலுமிச்சைப் பழத்தை பிழிந்து வைத்து இவ்வருவிகளில் நீராட்டுகின்றார்கள் மருத்துவர்கள். இது ஒரு சிகிச்சை முறையாகவே நிகழ்த்தப்படுகிறது.

இறைத்தலம்


     வடநாட்டிலுள்ள காசிக்கு நிகரான பெருமை பெற்ற தலம் தெற்கு அமைந்த காசி தென்காசி. குறுகிய பலா மரத்தின் அடியிலுள்ள சிவலிங்கம் குறும்பலாநாதர் என்ற பெயருடன் விளங்குகிறார்.

    சித்தர்களில் முதன்மையானவர் அகத்தியர். அவர் இக்குற்றாலத்திலே வசித்தார் என்று புராணங்கள் கூறுகின்றன அகத்தியருக்குப் பின்னும் பல சித்தர்கள் இப்பொதிகை மலையிலுள்ள மூலிகைகளைக் கொண்டு சித்த மருத்துவம் செய்தார்கள் என்று பல நூல்கள் கூறுகின்றன.

முடிவுரை


     இயற்கைச் சூழல் நிறைந்த தென்பொதிகை குற்றாலம் கண்ணுக்கு அழகு. அங்கு பாயும் அருவிகளில் குளிப்பது உடலுக்கு அழகு, மூலிகை வாசனையைச் சுமந்து வரும் காற்று நம் சுவாசத்திற்கு அழகு. இத்தகைய பெருமையும் அருமையும் கொண்ட குற்றாலத்திற்குச் சென்று அருவியில் நீராடி மனமும் உடலும் புத்துணர்ச்சிப் பெறுவோமாக.

Friday, July 19, 2019

அப்துல்கலாம் ஒரு இமயம்

மாணவர்களின் வேண்டுகோள் காரணமாக
ஐயா ஏ.பி.ஜே அப்துல்கலாம் கட்டுரை சில துளிகள்...

அப்துல்கலாம் 




முன்னுரை

    தமிழகம் தந்த தவப்புல்வாகளுள் ஒருவர் நம் இந்திய நாட்டின் மறைந்த குடியரசுத் தலைவர் டாக்டர். ஏ.பி.ஜே.  அப்துல்கலாம் அவர்கள். சாதாரண ஏழைக்குடும்பத்தில் பிறந்து தன் அயராத உழைப்பால் உலகம் போற்றும் விஞ்ஞாணியாகத் திகழ்ந்து இந்தியக் குடியரசுத் தலைவராக உயர்ந்தவர் கலாம் அவர்கள்.  இந்தியாவை முழு வளர்ச்சியடைந்த நாடாக மாற்றவேண்டும் என்ற தணியாத ஆவல் கொண்ட தேசப்பற்றாளர்.

பிறப்பும் -இளமைக்காலமும்

     தமிழகத்திலுள்ள இரமேசுவரத்தில் 1931-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 15-ம் நாள் அப்துல்கலாம் அவர்கள் பிறந்தார் இவரது தந்தையின் பெயர் ஜெயினுலாம்தீன், தாய் ஆஷியம்மா ஆகும்.

  கலாம் அவர்கள் ஆரம்பக் கல்வி முதல் உயர்நிலைப் பள்ளி வரை இராமேசுவரத்தில் கற்றார். சென்னையில் பொறியியல் படிப்பை முடித்தார். கல்வி கற்றும் காலத்திலேயே சாதிக்கும் ஆசையையும் இந்திய நாட்டின் வளர்ச்சியைப் பற்றியும் லட்சியம் கொண்டார்.

கலாம் வகித்த பணிகள்

    கலாம் துவக்கத்தில் விமான உற்பத்தி மற்றும் வளர்ச்சி நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்தார். அங்கு நந்தி என்ற ஜெட் விமானத்தை உருவாக்கினார். கலாமின் திறமையைக் கண்டு இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் அவரை அங்கு பணியில் இமர்த்தியது விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் பணியாற்றும் போது செயற்கைக் கோள்களை வானில் ஏவும் ஏவுகணைகளை உருவாக்கும் பணியில் சிறந்து விளங்கினார்.

     விண்வெளித் துறையிலிருந்து அணு ஆராய்ச்சித்துறைக்கு இடம் மாறி அங்கும் மிகப்பெரிய வெற்றி பெற்றார் காலம் இந்தியப் பாதுகாப்பு அமைச்சகத்தின் மிக முக்கிய பொறுப்பும் வகித்த கலாம் அவர்கள் இந்தியப் பிரதமரின் விஞ்ஞான ஆலோசகர் பதவிக்கு உயர்ந்து நின்றார். தகவல் துறையிலும் பாதுகாப்புத் துறையிலும் அவர் ஆற்றியப் பணிகள் எண்ணலடங்காதவை ஆகும்.

விருதுகளும் பட்டங்களும்

     அப்துல் கலாம் அவர்களின் சேவையைப் பாராட்டி பல விருதுகள் அவருக்கு வழங்கப்பட்டுள்ளன.

    டாக்டர் பிரேன்ராய் விண்வெளி விருது, ஓம் பிராகாஷ் பாஸின் விருது, புத்ம விபூஷன் விருது, நேரு தேசிய விருது, இந்திரா காந்தி விருது உள்ளிட்ட பல விருதுகள் பெற்றார். இது தவிர பல பல்கலைக் கழகங்கள் அவருக்கு சிறப்பு டாக்டர் பட்டம் வழங்கியது. 1998-ம் ஆண்டு அப்துல்கலாம் அவர்களுக்கு இந்தி நாட்டின் மிகச்சிறந்த விருதான பாரதரத்னா விருது வழங்கப்பட்டது.

குடியரசுத் தலைவரானார்

    சிறந்த விஞ்ஞானியாக மட்டுமின்றி சிறந்த தேசப்பற்றாளராகத் திகழ்ந்;த இவரது மாண்பைக் கண்டு மக்களும் மக்கள் பிரதிநிதிகளும் அப்துல்கலாம் அவர்களை இந்திய நாட்டின் குடியரசுத் தலைவர் பதவியில் அமர்த்தினர். 25-07-2002 -ம் நாள் பாரத திரு நாட்டின் 12-வது குடியரசுத் தலைவராக திரு. ஏ.பி.ஜே அப்துல்கலாம்  வஅர்கள் பதவியேற்றார் என்பது மிகவும் சிறப்பானது.

வழிகாட்டும் அப்துல்கலாம்

    அயராத உழைப்பும், திறமையும், சுறுசுறுப்பும், எளிமையும், இனனமும் பல குழந்தை சிரிப்பும் என பல நற்குணங்களையும் கொண்ட நமது குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் அவர்கள் இந்திய நாட்டை உலக அரங்கில் முன்னிறுத்த பல திட்டங்களைக் கூறி அதைச் செயல்படுத்தவும் மனைந்து வந்தார். அரசியலுக்கு அப்பாற்பட்டு மக்கள் நலனை முன்னிறுத்தியே அவர் செயலபட்டு வந்தார் என்றால் அது மிகையாகாது.

    மாணவர்களே இந்நாட்டின் வருங்காலத் தூண்கள் என்பதை உணர்ந்து இளைய தலைமுறைக்கு பல உபதேசங்களைக் கூறிவந்தார். நம் இந்திய திருநாட்டை 2020-ம் ஆண்டில் ஒரு முழு வளாச்சியடைந்த வல்லரசு நாடாக மாற்றிக்காட்ட அரும்பாடுபட்டு உழைத்தார்.

மறைவு

    அப்துல்கலாம் அவர்கள் கடந்த 2015-ம் ஆண்டு ஜூலை மாதம்  27-ம் தேதி இந்தியா நாட்டின் அமைந்துள்ள ஷில்லாங் இது மேகாலாய மாநிலத்தின் தலைநகரம் ஆகும். அங்கு இந்திய மேலாண்மை கல்வி நிறுவன மாணவர்களிடையே உரையாரடல் போது மயங்கி விழுந்தார். மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி காலமானார். இது இந்திய மக்களின் மிக பெரிய துயரமான நாளனது.

முடிவுரை

    அப்துல்கலாம் அவர்களின் ஒவ்வொரு சொல்லும் செயலும் நம் நாட்டின் முன்னேற்றத்திற்கானவை என்பதில் சிறிதும் ஐயமில்லை. திரு அப்துல்காலம் அவர்கள் கருத்திற்கிணங்க நாமும் கைகோர்த்து நம் தேசத்தை ஒரு முழுவளர்ச்சியடைந்த நாடாக உருவாக்க பாடுபடுவோம்.

Thursday, July 18, 2019

தென்காசி மாவட்டம்


திருநெல்வேலி மாவட்டத்தில் கீழ் இருந்து வந்த தென்காசி தனியாக மாவட்டம் என இன்று சட்டப்பேரவையில்; தமிழக முதல்வர் திரு. எடப்பாடி பழனிசாமி அவர்கள் விதி எண் 110-ன் கீழ் வெளியிட்டார். இதனால் தென்காசி பகுதி மக்கள் மிக மகிழ்ச்சியுடன் கொண்டாடினார்கள். தற்பொது தமிழ்நாட்டின் மொத்த மாவட்டங்களின் எண்ணிக்கை 35 ஆகும்.

Wednesday, July 17, 2019

நடிகர் விவேக் அவர்களின் தாய் மரணம்

சின்ன கலைவாணர் காமெடி நடிகர் விவேக் அவர்களின் அம்மா மரணம்

நகைச்சுவை நடிகர் திரு. விவேக் அவர்களின் தாய் மணியம்மாள், வயது 86, மாரடைப்பின் காரணமாக இன்று காலமானார்.

திரு விவேக் அவர்கள் 1961-ல் நவம்பர் 19-ம் தேதி பிறந்தார். திரு. விவேக் சொந்த ஊர் மதுரை, தந்தை அங்கையா பாண்டியன் இராமநாதபுரம் மாவட்டத்தில் ஆசிரியராக பணியாற்றி ஒய்வு பெற்றவர். மற்றும் தாய் மணியம்மாள்ஆவார். மனைவி அருள்செல்வி, திரு விவேக் அவர்களின் குழந்தைகள் அமிர்ந்;தா நந்தினி, தேஜஸ்வனி மற்றும்  பிரசன்னா குமார். (பிரசன்னா குமார் கடந்த 29 அக்டோபர் 2015 இறந்தார்).  

தூய்மை இந்திய சுற்றுப்புறத் தூய்மை

சுற்றுப்புறத் தூய்மை என்பது மிகவும் அவசியம் எனவே இந்த தலைப்பில் கட்டுரை எமது நண்பர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் வேண்டுகொள் இனக்க இதோ...

தூய்மை இந்தியா


முன்னுரை

‘சுத்தம் சுகம் தரும்” என்பது முதுமொழி தூய்மையைப் பற்றி வள்ளுவரும் பல குறள்கள் இயற்றியுள்ளார். நம் சுற்றுப் புறத்தைத் தூய்மையாக வைத்திருப்பது நமக்கு பலவகையிலும் நன்மை பயக்கும். நிலம், நீர், காற்று என்ற மூன்றும் மனிதனின் சுற்றுப்புறமாக அமைந்துள்வை. அவற்றை எவ்வாறு தூய்மையாக வைத்துக் கொள்வது என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.


சுத்தமும் சுகாதாரமும்

     நம்மைச் சுற்றியுள்ள இடங்களைத் தூய்மையாக வைத்துக் கொள்வதே நிலத்தூய்மை எனப்படுகிறது. கண்ட இடங்களில் எச்சில் துப்புவது. முல ஜலம் கழிப்பது, குப்பையைப் போடுவனவெல்லாம் நம்மைச் சுற்றயுள்ள நிலத்தை அசுத்தப்படுத்தும்.  அதனால் பல கிருமிகளும்  நுண்ணியிரிகளும் உருவாகி மனிதர்க்கு பலவித நோய்களை உருவாக்கும். அதனால் நம்மை சுற்றியுள்ள இடத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். மேலும் எளிதில் மக்கிப்போகாத பிளாஸ்டிக் போன்ற பொருட்களை நிலத்தில் கொட்டி அதன் வளத்தையும் இந்திய தூய்மையையும் கெடுக்காதிருக்க வேண்டும்.
நாம் சுவாசிக்கும் காற்று மண்டலத்தையும் நாம் இன்று அசுத்தப்படுத்தி வருகிறோம் என்பது வேதனைக்குரியது. மோட்டார் வாகனங்களிலிருந்து அதாவது  வாகனம் போருந்து, லாரி, வேன், ஜீப், ஆட்டே ரிக்ஷா போன்ற மூன்று, நான்கு சக்கர வாகனம் மற்றும் பைக் போன்ற இரண்டு சக்கர வாகனத்தில் இருந்து வெளியேறும் புகை, தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் நச்சுப்புகை, பிளாஸ்டிக் பொருட்கள், டையர் எரிப்பதால் உண்டாகும் புகை அனைத்துமே நம் வளிமண்டலத்திலுள்ள நல்ல காற்றை அசுத்தப்படுத்துகிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அக்hற்றைச் சுவாசிக்கும் நமக்கு வரும் கேட்டையும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

நீர், நிலம் , காற்று மட்டுமின்றி நாம் உபயோகிக்கும் அனைத்துப் பொருட்களையும் தூய்மையாக வைத்திருப்பதே இந்தியாவின் முழுமையான தூய்மையாகும். இதனால் நமக்கு பிறருக்கும் எந்தக்  கேடும் விளையாமல் இருக்கும்.


முடிவுரை

     இந்தியாவின்  ஆரோக்கியம் அதன் சுற்றுப்புறத் தூய்மையைப் பொருத்தே அமைகிறது என்பதை நாம் புரிந்து கொண்டோம். இனியேனும் நம்மைச் சுற்றியுள்ள இடங்களை தூய்மையாக வைத்திருப்பது ஒவ்வொரு இந்தியருடைய கடமை, அதுவே நமக்கும் நம்மைச் சார்ந்தவர்களுக்கும் நாம் செய்யும் அரிய உதவியாகும்.


இணையத்தின் நண்பர்களுக்கு வணக்கம்

இந்த வலைபகுதிக்கு வந்த அனைத்து நண்பர்களுக்கும் எனது மணமகிழ்ச்சியை தெரிவித்துகொள்கிறேன். இங்கு உங்களுக்கு உபயோகப்படக்கூடிய, எனக்கு தெரிந்த சரியான கட்டுரை, கதை, கவிதை, தமிழ் மொழியில் தொகுத்து தர முயற்ச்சிக்கிறேன். மேலும் எனக்கு உங்களுடைய கருத்து மற்றும் யோசனைகளை வழங்கவும்.